உசிலம்பட்டி டிரான்ஸ்பார்மரில்-பொதுமக்களுக்கு விபத்து அபாயம்

பேரையூர் : உசிலம்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் கை தொடும் உயரத்தில், மின்வயர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் உள்ள 15வது வார்டு வி.எம்.தெருவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள வயர்கள் குழந்தைகள் கூட தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

மழை காலங்களில் இடி, மின்னல் ஏற்படும்போது மின்விபத்து ஏற்படுமோ என பொதுமக்கள், அந்த தெரு வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். டூவீலர்கள், ஆட்டோ, கார், பள்ளி வாகனங்களில் பயணிப்போரும் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் தலையிட்டு மின்வயர்களை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: