புதுடெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது. இம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கின் கடும் எதிர்ப்பையும் மீறி, இம்மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். மேலும், கட்சி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் பதவி விலகிய பிறகு, சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை அனைத்திலும் இம்மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான ஹரிஸ் ராவத் முக்கிய பங்கு வகித்தார்.