வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்று தென்னேரி. இதன் கொள்ளளவு 18 அடி. இந்த ஏரி நீர் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது தென்னேரிக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த தென்னேரியின் மூலமாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்போக நெல் பயிரிட்டு வருகிறோம்.