கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த போலீசார் நினைவைப் போற்றும் வகையில் நேற்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, எஸ்.பி, சாய்சரண் தேஜஸ்வி, ஏ.எஸ்.பி., அரவிந்த் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மாவட்ட வன அலுவலர், போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அங்கிருந்த நினைவு தூணில் உயிர்நீத்த காவல்துறையினருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி பேசியதாவது: