பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை பகுதியில் கொசஸ்தலை ஆற்றிலிருந்து டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் நேற்று காலை அப்பகுதியில் அதிரடி சோதனை செய்தனர்.அப்போது ஆற்றிலிருந்து மணல் அள்ளிக் கொண்டு சென்ற டிராக்டரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சின்ன அத்திமாஞ்சேரிப்பேட்டை சேர்ந்த ரவி என்பவரை கைது செய்தனர்.