தென்காசி அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் ராமலிங்காபுரத்தை சேர்ந்த 46 வயதான மகேஸ்வரி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தான் இறங்க வேண்டிய இடம் வந்ததால் இருக்கையில் இருந்து எழுந்து நின்ற அவர், நிலைதடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்தார்.

உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், சக பயணிகளின் உதவியுடன், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருந்ததால் இந்த காட்சியானது வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.

Related Stories: