திருவள்ளூர்: சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், ஜி. மோகன் ஆகியோர் திருவள்ளூரை அடுத்த உளுந்தை, மப்பேடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 வாகனங்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது.