திருவனந்தபுரம்: கொச்சியில் 5.5 கோடி போதை பொருள் கடத்திய சம்பவத்தில் வெளிநாட்டை சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், கொச்சி விமான நிலையம் வழியாக பல்ேவறு நாடுகளில் இருந்தும் சமீபகாலமாக பெருமளவு போதை பொருள் கடத்தப்படுகிறது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் தோகாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் கொச்சி வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த கானே சிம்பே(21) என்ற இளம்பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், கொச்சியில் வியாபாரத்திற்கு ஜவுளி பொருள் வாங்க வந்திருப்பதாக கூறினார். அவரது பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள் அவரது கைப்பையை சோதனையிட்டனர். அதில் ரூ.5.5 கோடி மதிப்பிலான கொகைன் போதை பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.