அரியானா: அரியானாவில் கைக்குழந்தையுடன் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்ற பெண் சாலையில் இருந்த கழிவுநீர் குழிக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பரிதாபாத்தில் உள்ள ஹவாஹர் காலனியில் இளம்பெண் ஒருவர் 9 மாத கைக்குழந்தையுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால் சாலையின் நடுவே இருந்த கழிவுநீர் குழியை கவனிக்காத அந்த பெண், அதில் திடீரென தவறி விழுந்தார்.