டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாதி ரீதியாக அவதூறு கருத்தை தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உடன், யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்-ல் உரையாடினார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து யுவராஜ் சிங் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்தார். அதில் சாஹலின் ஜாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவரின் அந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜான்சியில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் தனது பேச்சுக்காக யுவராஜ் சிங் அப்போதே மன்னிப்பும் கூறினார்.