நொய்டா: உபி மாநிலம் காஜியாபாத்தில் உள்ள சித்தார்த் விகாரில், பிரதீக் கிராண்ட் சொசைட்டி என்கிற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் முதல் பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடுக்குமாடியில் குடியிருக்கும் ஓரு குடும்பத்தை சேர்ந்த 14 வயதுடைய இரட்டையர்கள் நேற்று மன்தினம் நள்ளிரவில் 25வது தளத்தில் உள்ள வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சொசைட்டி பாதுகாவலர் உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.