சுற்றுலா பயணிகளை கவரும் சக்குளன்ஸ் வகை தாவரங்கள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல வகையான சக்குளன்ஸ் தாவரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள், தாவரங்கள், மரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் பல்வேறு அழகு தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வருகின்றனர்.  தற்போது, 2ம் சீசன் என்பதால் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர கண்ணாடி மாளிகையிலும் 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில்  தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை ஒரு பகுதியில் 30 வகையான சக்குளன்ஸ் தாவரங்களின் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை கவர்ந்து வருகிறது. இந்த கள்ளிச் செடிகளை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: