சில்சார்: அசாம் மாநிலம் பிரிக்கப்பட்டு, கடந்த 1972ம் ஆண்டு மேகாலயா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தை பிரிக்கும்போது, நிலப்பகுதிகளை பிரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட, ‘அசாம் மறுசீரமைப்பு சட்டம் -1971’ஐ, மேகாலயா அரசு எதிர்த்து வருகிறது. இரு மாநிலங்களும் 884.9 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில், 14 பகுதிகளில் எல்லை பிரச்னை நிலவுகிறது. இதேபோல், மிசோரம் - அசாம் இடையிலும் எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த எல்லை பிரச்னை தொடர்பாக அசாம் - மேகாலயா மாநில அமைச்சர்கள் நேற்று முன்தினம் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.