புதுடெல்லி: சிறையில் இருந்தபடி ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ், அவரது மனைவி லீனா மரியா பாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் பல மோசடிகளை அரங்கேற்றியவர். 17 வயதில் இருந்து பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரை கைது செய்த போலீசார் டெல்லி ரோகிணி சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்தபடியே, திருட்டுத்தனமாக செல்போன் பெற்ற சுகேஷ், தனது கூட்டாளிகள் உதவியுடன், பெரும் தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, தான்ஒரு அரசு உயர் அதிகாரி எனக்கூறி, சில காரியங்களை செய்து தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார்.