மகப்பேறு விடுமுறை சட்டம் ரத்து எந்த குழந்தையை தத்து எடுத்தாலும் 12 மாதம் மகப்பேறு விடுமுறை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: எந்த வயதுள்ள குழந்தையை தத்து எடுத்தாலும் 12 மாத மகப்பேறு விடுமுறை உண்டு என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்க்கு மட்டுமே 12 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4)-ஐ எதிர்த்து, இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்த தாயான வழக்கறிஞர் ஹம்சானந்தினி நந்தூரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: குழந்தையைத் தத்தெடுத்தல் என்பது பிரசவ உரிமையின் ஒரு பகுதி. 3 மாதங்களுக்குட்பட்ட குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கும் பெண்ணுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறிய சட்டம், ஒரு பாகுபாடு நிறைந்த சட்டம். எனவே சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 இன் பிரிவு 60(4)-இன் கீழ் குழந்தையின் வயதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட வகைப்பாடு, அரசியலமைப்பின் சரத்துகள் 14 மற்றும் 21-ஐ மீறுவதாக உள்ளது. தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது எத்தனையாயினும், அக்குழந்தையைத் தத்தெடுத்த தாய்க்கு 12 வார மகப்பேறு விடுப்பு பெற உரிமை உண்டு. அதே போல் தந்தைக்கான விடுப்பை ஒரு சமூகப் பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையிலான ஒரு சட்ட விதியை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: