மதுராந்தகம்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் இடங்களில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. இதில், செங்கல்பட்டு 10வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மாலதி, அச்சிறுப்பாக்கம் 8வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சிலம்பரசன் ஆகியோரை ஆதரித்து, நேற்று மாலை இறுதிக்கட்ட பிரசாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.