லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் விவரத்தை இன்றைக்குள் அளிக்கும்படி இம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கெடு விதித்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லவகுசா, ஆசிஸ் பாண்டே என்ற 2 பேரை உபி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆசிஸ் மிஸ்ராவையும் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.