மும்பை: போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கானை அக்டோபர் 11 வரை விசாரிக்க வேண்டும் என்ற என்.சி.பி.யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆர்யன்கான் ஜாமீன் மனு குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பதிலளிக்கவும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.