புதுடெல்லி: விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற உதவுவோருக்கு ரூ.5,000 பரிசு வழங்கும் திட்டம், வரும் 15ம் தேதி நாடு முழுவதும் அமலாகும் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்குவோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். ஆனால், பெரும்பாலான விபத்துகளில் காயமடைந்தவர் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் அவரின் உயிரை டாக்டர்களால் காப்பாற்ற முடிவதில்லை.