மேலூர்: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே சிவாலயத்தில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்கம், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில், புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.