ஐபிஎல் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகல்

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணி, கரீபியன் பிரிமியர் லீக் தொடர், ஐபிஎல் தொடரில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்குள் இருந்துள்ளதால் மனரீதியில் புத்துணர்வு பெற முடிவு செய்துள்ளேன்.

மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிறப்பாக ஆட கவனம் செலுத்த உள்ளேன். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்று கிறிஸ்கெய்ல் அறிவித்துள்ளார். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக 10 போட்டிகளில் ஆடி உள்ள கெய்ல் 193 ரன் எடுத்துள்ளார்.

Related Stories: