கடையம்: தென்காசி அருகே போலீசார் அதிரடி சோதனையில் ஆயுத குவியல்கள் சிக்கின. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்போர் போன்ற நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பழைய குற்றவாளிகள், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.