பெரம்பூர்: பெரம்பூர் மேல்பட்டி பொண்ணப்பன் தெரு மற்றும் பி.பி.சாலை சந்திப்பு போன்ற பகுதிகளில் செம்பியம் உதவி கமிஷனர் பாபு, செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிலர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.