திருவனந்தபுரம்: மதுரை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (39). அவரது மனைவி விஜி (36). கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சட்டமுணாறு பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தம்பதி பைக்கில் மதுரைக்கு வந்தனர். இன்று அதிகாலை மீண்டும் இடுக்கிக்கு புறப்பட்டனர். காலை சுமார் 5.45 மணியளவில் இடுக்கியை அடுத்த சங்கரபாண்டியமேடு பகுதியில் ஒரு வளைவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காட்டு யானை நின்று ெகாண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் யானை நிற்பது மகேந்திரகுமாருக்கு தெரியவில்லை. அருகில் சென்றபோது தான் யானையை கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பைக்கை வேகமாக திருப்ப முயன்றார்.