ஆஸ்ட்ரவா: செக் குடியரசில் நடைபெறும் ஆஸ்ட்ரவா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் கஜகிஸ்தான வீராங்கனை எலனா ரிபாகினா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று கஜகிஸ்தான் வீராங்கனை எலனா ரிபாகினா(22வயது, 16வது ரேங்க்), போலந்து வீராங்கனை மேக்டா லினெட்(29வயது, 59வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் முதல் சுற்றை எலனா 6-3 என்ற புள்ளி கணக்கிலும், 2வது செட்டை மேக்டா 6-2 என்ற புள்ளி கணக்கிலும் எளிதில் கைப்பற்றினர். யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்யும் 3செட்டில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.