அனுமதியின்றி கட்டப்பட்ட 2 வணிக வளாகங்களுக்கு சீல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தங்கும் விடுதி மற்றும் 12 கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகம் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் சம்மந்தப்பட்ட வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால், எந்த பதிலும் அளிக்கவில்லை, என கூறப்படுகிறது.இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் பால் தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர்கள் மனோஜ், ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: