சென்னை: தேனாம்பேட்டை நடைபாதையில் வசித்து வந்தவர் வெற்றிவேல் (41). கட்டிட தொழிலாளி. வேலை செய்யும் இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சங்கர் (45), ரகு (40) ஆகியோர் இவருக்கு பழக்கமாகியுள்ளனர். இவர்கள், கடந்த 21ம் தேதி இரவு தேனாம்பேட்டை தியாகராயர் சாலையில் மது அருந்தி உள்ளனர். பின்னர், கட்டிட வேலை செய்த சம்பளத்தை 3 பேரும் பிரித்த போது, வெற்றிவேல் மற்றும் சங்கர், ரகு ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வெற்றிவேல் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.