சென்னை: துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த பெண் பயணியை தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க வளையல்கள் உள்ளிட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் எடை 307 கிராம். சர்வதேச மதிப்பு ரூ13 லட்சம். இதையடுத்து பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்தனர்.
இதேபோல், நேற்று சார்ஜாவிலிருந்து ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த ஆண் பயணி, அவருடைய ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 357 கிராம் தங்கம், மற்றும் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், சிகரெட்களை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ16 லட்சம். இதையடுத்து சிவகங்கை பயணியையும் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து துபாய், சார்ஜா ஆகிய 2 விமானங்களில் நடத்திய சோதனையில் திருச்சி பெண் பயணி, சிவகங்கை ஆண் பயணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு ரூ29 லட்சம் மதிப்புடைய 664 கிராம் தங்கம், சிகரெட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.