கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, கடந்த ஜூன் 3ம் தேதி கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டம் மூலம் வேம்பு, புங்கன், பாதாம், ஆலன், அரசன், அத்தி, பூவரசன், ஈட்டி, சந்தனம் போன்ற 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. நேற்று அந்த மரங்களை தர்மபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, மரக்கன்றுகள் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியை கண்டு பாராட்டினார்.