திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மர்ம பொருள் வெடித்து 3 பேர் படுகாயம்!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டிட பணியின்போது மர்மபொருள் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். முருகேசன் என்பவரின் பூர்வீக வீட்டை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வந்தது. தரைப்பகுதியை மண்வெட்டியால் கூலி தொழிலாளி சூர்யா தோண்டியபோது பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் வெடித்தது. மர்மபொருள் வெடித்ததில் சூர்யா, உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் ரேவதி, சுப்பிரமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மர்மபொருள் வெடித்தது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மர்ம பொருள் வெடித்து 3 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Related Stories: