வேளச்சேரி: வேளச்சேரி, நேரு நகர், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி லட்சுமி (47). தம்பதிக்கு செல்வி என்ற மகளும், மூர்த்தி (30) என்ற மகனும் உள்ளனர். பிளம்பர் வேலை செய்யும் மூர்த்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால், கடந்த 3 வருடத்திற்கு முன் அவர், மூர்த்தியை பிரிந்து சென்றார். இதனால், பெற்றோருடன் வசித்து வந்த மூர்த்தி, மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த மூர்த்திக்கு, தாய் சாப்பாடு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு விட்டு வெளியில் சென்ற மூர்த்தி, மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவர், சாப்பாடு தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.