கொல்கத்தா: அரசியலுக்கு முழுக்கு போடுவதாக கூறிய வந்த பாஜ எம்பி.யும். ஒன்றிய முன்னாள் அமைச்சருமான பபுல் சுப்ரியா, நேற்று திடீரென திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். மேற்கு வங்க மாநிலம், அசன்சால் மக்களவை தொகுதி பாஜ உறுப்பினர் பபுல் சுப்ரியா. இவர் பின்னணி பாடகராக இருந்து அரசியலில் நுழைந்தார். ஒன்றிய அரசில் இவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சராக இருந்தார். சமீபத்தில் மோடி செய்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்ட்டது. இதனால், விரக்தி அடைந்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.