அலிகார்: முதல்வர் மம்தாவின் தலைக்கு ரூ. 11 லட்சம் தருவதாக கூறிய உத்தரபிரதேச பாஜக நிர்வாகியை, மேற்குவங்க போலீசார் நேற்றிரவு அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் வீர்பூமி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சென்ற போது, குறிப்பிட்ட இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ் செய்தனர். அதில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த பாஜக நிர்வாகி யோகேஷ் வர்ஷினி காயமடைந்தார். அப்போது அவர், ‘முதல்வர் மம்தா பானர்ஜியின் ‘தலை’யை கொண்டு வருவோருக்கு ரூ.11 லட்சம் வெகுமதி அளிக்கப்படும்’என அறிவித்தார். இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றது.