புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் நேற்றிரவு டெல்லியில் திடீரென சந்தித்தால், அவரது தலைமை மாற்றம் குறித்து பரபரபப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், அடுத்தாண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை, இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் நேற்றிரவு திடீரென சந்தித்தார். ஏற்கனவே, கர்நாடகா, உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆளும் பாஜக முதல்வர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்ட நிலையில், இமாச்சல் முதல்வரின் டெல்லி வருகை தலைநகரில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.