திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா, தனது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவுடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் முத்தம் கொடுக்கும் விதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.