கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், சாரதா, ரோஸ் வேலி நிதி நிறுவனங்களைப் போல ஐ-கோர் நிதி நிறுவனமும் மக்கள் பணத்தை ஏமாற்றி மோசடி செய்தது. இந்த ஊழல் வழக்கையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐ-கோர் பொன்சி ஊழல் வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பரதா சட்டர்ஜியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவரிடமும் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை 2 மணி நேரம் நடந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் அமைச்சர் பார்தாவுக்கு அமலாக்கத் துறையும் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.