சென்னை : நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதுமே நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராய அமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் வாக்குறுதியில் நீட் ரத்து செய்வோம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதை குறிக்கும் வகையிலும் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர்.