கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் - பாஜ இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.வடக்கு 24 பர்கானா மாவட்டம், பத்பராவில் உள்ள அவரது வீட்டின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது பற்றி கேள்விப்பட்டதும் டெல்லியில் இருந்த அர்ஜுன் சிங் அவசரமாக வீடு திரும்பினார். இது குறித்து அர்ஜுன் சிங் கூறுைகயில், ‘‘இது, திரிணாமுல் காங்கிரசாரின் திட்டமிட்ட சதி. பபானிபூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மேற்பார்வையாளராக கட்சி தலைமை என்னை நியமித்துள்ளது.