செந்துறை : செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை கிராமமக்கள் ஆர்வத்துடன் நட்டு வைத்தனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள், கோயில்களின் காலியிடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில் 1 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் 60 ஆயிரம் பனைவிதைகள் நடும் திட்டத்தினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சில தினங்களுக்கு முன் மணக்கால் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.