சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது. மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மழை பெய்தால், ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: