திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இந்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்திய கடற்படைக்காக ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு இ-மெயில் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கப்பல் தொழிற்சாலையை குண்டு வைத்து தகர்ப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.