திசையன்விளை: திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் டாக்டர் பிரேம் அரசன் ஜெயராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் மற்றும் செவிலியர்கள் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.