கோவை: கோயம்புத்தூரை சேர்ந்த வயதான தம்பதியர் தங்களின் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து சொத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயிலாக எழுதி வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசி தாஸ். ஓய்வுபெற்ற மின் ஊழியரான துளசிதாசுக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் மகன்கள் மனவளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் துளசி தாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார்.