இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. தகவலறிந்து வனத்துறையினர், உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் விநியோகத்தை துண்டித்தனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோத்தகிரி கால்நடை உதவி மருத்துவர் ரேவதி ஆகியோர் இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில் அந்த யானை 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை என்று தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
The post பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி appeared first on Dinakaran.