பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி: 11 பதக்கங்களுடன் இந்தியா 36-வது இடத்துக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி 10-வது நாளை எட்டியுள்ளது. இன்று டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் இறுதி போட்டியில் 2.07 மீ. தாண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றார் 18 வயதான  பிரவீன்குமார். பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 11 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் 31-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Related Stories: