டிஸ்பூர் : கேல் ரத்னா விருதில் ராஜீவ் காந்தி பெயரை நீக்கியதை தொடர்ந்து அசாமில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் ராஜீவ் காந்தி பெயரை நீக்க அம்மாநில பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. அசாம் மாநில பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி ஓரங் தேசிய பூங்காவின் பெயரை ஓராங் தேசிய பூங்கா என மாற்றம் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் இதனை அறிவித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆதிவாசிகள் மற்றும் தேயிலை பழங்குடியினரின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்படுவதாக விளக்கம் அளித்தார்.