சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல உள்ளார். அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருந்தும் அவர் மீது திருநெல்வேலி காவல் துறையால் 2017ம் ஆண்டு தொடப்பட்ட குற்றவழக்கு மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி பாஸ்போர்ட் அதிகாரி அந்த பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டு திரும்ப பெற்றுக்கொண்டார். இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.