புதுச்சேரி: கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ குறித்து குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: கே.டி.ராகவன் பெயரில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதற்கு ஒரு குழு போட்டுள்ளோம். அந்த குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அந்த பத்திரிகையாளர் எதற்கு என்னை சந்தித்தார். அப்போது நான் என்ன பேசினேன் என்று அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது.