யூடியூப் சேனலை முடக்கினால்... 100 பேருடன் ‘அதுக்கு’ தயார்: ரவுடி பேபி சூர்யா ‘அழைப்பு’ எச்சரிக்கை

மணப்பாறை: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணைய தளத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது‌. இதை பயன்படுத்தி பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில்  சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆபாச இணையதளங்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருச்சியை ேசர்ந்த ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் புகழ் சூர்யாவின் யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடி பேபி சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் ேசனலை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் எனது சேனலை முடக்குறீங்களா... முடக்குங்க.... நான் தவறான பாதைக்கு போவேன்.. சத்தியமா போவேன்.  என் பிள்ளை மேல ஆணையா போவேன்... போவேன்... 100 பேருடன் ‘அதுக்கு’ தயார்.

என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்... என்பதோடு அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரவுடி பேபி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்தி நகரை சேர்ந்த டிக்டாக் புகழ் சூர்யாதேவி(35),  ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தரை செருப்பால் அடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வழக்கில் மதுரை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தான், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுரை கமிஷனருக்கு சூர்யா தேவி வீடியோ அனுப்பினார். கமிஷனர் உத்தரவின் பேரில், போலீசார் மணப்பாறையில் உள்ள சூர்யாதேவி வீட்டுக்கு வந்த போது, அவர் மின் விசிறியில் தூக்கு கயிறை மாட்டி வைத்து விட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர். இப்போது ரவுடி பேபி சூர்யாவும் தீக்குளிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories: