காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

காரமடை: காரமடை அடுத்த திம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டான் (65). இவரது மனைவி முருகம்மாள் (60). இவர்கள் 10-க்கு மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இவரது வீட்டில் வெள்ளாடு ஒன்று 7 குட்டிகளை ஈன்றது. வழக்கமாக ஆடுகள் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை மட்டுமே ஈனும். ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஆடு ஈன்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரவியது. ஏராளமானோர் வந்து ஈன்ற ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து விட்டு செல்கின்றனர்.

The post காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு appeared first on Dinakaran.

Related Stories: